Wednesday, December 8, 2010

ஆண்டிமுத்து ராசா விடம் CBI விசாரணை

சென்னை, டிச. 8-
தொலை தொடர்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்து வருகின்றன. இதனால் 2 வாரத்துக்கு மேலாக பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது.
இந்த சூழ்நிலையில் அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் நெருக்கடி காரனமாக  மத்திய தகவல் தொடர்பு மந்திரி ஆ. ராசா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனை நடத்தவேண்டி  தினமும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. போலீசார், அமலாக்கப்பிரிவு மற்றும் விசாரணை குழுக்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொலை தொடர்புத்துறை அதிகாரிகளிடம் விசாரணையை நடத்தினார்கள். அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இன்று டெல்லி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
டெல்லியில் மோதிலால் நேரு மார்க்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா வீடு உள்ளது. அங்கு இன்று காலை 6 மணிக்கு 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்றது. 7 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக அவர்கள் சோதனையிட்டனர்.
அங்கு சோதனை தொடங்கிய அதே நேரத்தில் சென்னையிலும் சோதனைகள் தொடங்கின. சென்னை போயஸ் கார்டன் அருகே உள்ள வெள்ளாள தேனாம் பேட்டை 5-வது குறுக்குத் தெருவில் ஆ. ராசாவின் நண்பர் சாதிக் வீடு உள்ளது. இங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தபடி சோதனை நடத்துகின்றனர்.
பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் உள்ள ஆ. ராசாவின் பூர்வீக வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வீட்டில் ஆ.ராசாவின் அண்ணன் கலியபெருமாள் வசித்து வருகிறார்.
அதுபோல லாடாபுரம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் டவுனில் உள்ள ராசாவின் அக்கா வீடு மற்றும் பெரம்பலூரில் உள்ள ஆண்டிமுத்து- சின்ன பிள்ளை அறக்கட்டளையிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 4 இடங்களிலும் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல டெல்லியில் உள்ள தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்தது.
தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, தொலை தொடர்புத்துறை ஆணைய உறுப்பினர் ஸ்ரீதர், தொலை தொடர்புத்துறை துணை டைரக்டர் ஜெனரல் ஸ்ரீவஸ்தவா, ஆ. ராசாவின் தனி செயலாளர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன .

Saturday, November 27, 2010

தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்:ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., ஆவேசம்

சென்னை:""நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்க வழிவகுத்ததுதான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது. இதற்கு பொறுப்பேற்று தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்,'' என,வடசென்னை மாவட்டசெயலாளர்,டி.ஜெயக்குமார் பேசினார்.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, 26 நவம்பர் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அமைப்புச்செயலாளர் .சி. பொன்னையன் அவர்கள் பேசும்போது,""தி.மு.க.,வை நம்பி காங்கிரஸ் மோசம் போயுள்ளது. அவர்களால் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம், இந்திய வரலாற்றில இதுவரை எந்த பிரதமருக்கும் நேர்ந்ததில்லை.தமிழகத்தில் தி.மு.க., செல்வாக்கு இழந்து விட்டது. தமிழகம் முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்'' என்றார்.முன்னிலை வகித்து மாவட்டச் செயலாளர் .டி. ஜெயக்குமார்அவர்கள் பேசும்போது,""நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, மாணவர்கள் கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடக்க, வழிவகுத்தது தான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது.இப்போது மொபைல் போனில், ஒரு நிமிடத்திற்கு 60 பைசா கொடுத்து பேசுகிறீர்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்கவில்லை என்றால் ஐந்து பைசாவில் பேசியிருக்க முடியும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தொலை தொடர்புத்துறை ஸ்தம்பித்துள்ளது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இனியும் தொடரக்கூடாது; விரைவில் அ.தி.மு.க., ஆட்சி மலரும்'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில், பூங்காநகர் எம்.எல்.ஏ..வும் துறைமுகம் பகுதி செயலாளருமான,கு. சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல்,கொளத்தூர் பகுதி செயலர் வெற்றி நகர் .மு.சுந்தர்.  உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு: ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்ததால், ராஜாஜி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.வேறு வழியின்றி போலீசார், அவ்வழியேயான போக்குவரத்தை நிறுத்தி, மாற்று வழியில் செல்ல வழிவகுத்தனர். இதனால் மக்கள் அவதிப்பட்டனர். போக்குவரத்து சீரடைய இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது.

Saturday, November 13, 2010

சட்டம்- ஒழுங்கை சீரழிக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசை கண்டித்து மன்னார்குடியில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்

சட்டம்- ஒழுங்கை சீரழிக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசை கண்டித்து மன்னார்குடியில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு


சென்னை, நவ. 14-

திருவாரூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழித்துக்கொண்டிர ;ுக்கிற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து மன்னார்குடியில் நாளை (15-ம் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள் ;.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பு வருமாறு:-

கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்கிறது. பின்னர் ஆளும் தி.மு.க-வினர் இதில் தலையிட்டவுடன், அவர்கள் உத்தரவின் பேரில் அந்த வழக்குகளை காவல்துறை வாபஸ் பெறுகிறது.

அதாவது, ஆளும் தி.மு.க.-வினரின் கட்டப்பஞ்சாயத்திற் ;கு காவல் துறை துணை போகிறது. இது போன்ற பணிகளில் தான் காவல் துறையினர் நாட்டம் செலுத்துகின்றனரே தவிர, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை ; பட்டியலிடலாம்.

மன்னார்குடி நகரம், கோபிரளயம் சாலையில் காளியம்மாள் என்ற பெண்மணி 9.6.2010 அன்று கொலை செய்யப்பட்டது;

திருத்துறைப்பூண்டி ; காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாமணி பகுதியில் 1.8.2010 அன்று 5 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டது;

நீடாமங்கலம், கோவில்வெண்ணி அம்பேத்கர் நகரில் கோவிந்தமாள் என்கிற மூதாட்டி கொலை செய்யப்பட்டது உள்பட பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத ; சூழ்நிலை நிலவுகிறது.

இதே போன்று, மன்னார்குடி நகரத்தில் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 25.6.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, துணிக்கடை அதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை, திருவாரூர் நகரத்தில் வேளாண்துறை தோட்டக்கலை உதவி இயக்குநர் வீட்டில் 15.5.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, 20.7.2010 அன்று நூருல்அமீன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 19.2.2010 அன்று ரவிச்சந்திரன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 7.8.2010 அன்று நன்னிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் ஜெயந்தி என்பவருடைய செயின் அறுப்பு, மூங்கில்குடி முத்து அனிதாவின் செயின் அறுப்பு. என பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவி ;ல்லை. மாறாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுவது, தி.மு.க-வினருக்கு எதிராக கழக நிர்வாகிகள் புகார்கொடுத்தால் அதை பதிவு செய்யாமல், தி.மு.க.-வினரை அழைத்து கழக நிர்வாகிகள் மீது புகார் கொடுக்கச் சொல்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் திருவாரூர் மாவட்டக் காவல் துறை ஈடுபட்டு வருவதாகவும், காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு கள்ள சாராயம் கடத்துவதற்கு உறுதுணையாக காவல் துறை இருப்பதாகவும், திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தி.மு.க. மாவட்டச் செயலாளரைப் போல் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே, ஆளும் தி.மு.க-வினரின் ஏவல் துறையாக மாறி, சட்டம்&-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திருவாரூர் மாவட்டக் காவல் துறையையும், மைனாரிட்டி தி.மு.க. அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 15.11.2010 திங்கட் கிழமை அன்று காலை 10 மணி அளவில், மன்னார்குடி நகரம், மேல ராஜ வீதி, பெரியார் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட் ட ம் , கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. பி.எச். மனோஜ்பாண்டியன்,எம்& #46;பி., அவர்கள் தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.இரா.காமராஜ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவாரூர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


பொதுச்செயலாளர் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
நாள்: 13.11.2010
சென்னை-14.

Wednesday, November 3, 2010

காவிரி நீரைப் பெறுவதற்கு முதல்வருக்கு துணிச்சல் இருக்கிறதா?புரட்சிதலைவி அம்மா கேள்வி

சென்னை : "காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு, மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ முதல்வர் கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:முதல்வர் கருணாநிதி தன் அறிக்கையில், காவிரி நதிநீர் ஆணையத்தை நான் பல் இல்லாத ஆணையம் என கூறியதாகவும், தற்போது இதன் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப் பெற்றதிலிருந்தே இது அதிகாரமற்ற ஆணையம் என்று தான் நான் குறிப்பிட்டு வருகிறேன்.கடந்த 30ம் தேதி அறிக்கையில், "1998ல், பா.ஜ., தலைமையிலான ஆட்சி மத்தியில் நடைபெற்று வந்த போது, காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட சமயத்தில், காவிரி நதிநீர் ஆணையம் அரசு அதிகாரிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்."காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடக அரசு மறுக்கும் சமயத்தில், அங்குள்ள அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி நதிநீர் ஆணையம் எடுத்துக் கொள்ளும் வகையிலான அதிகாரத்தை அந்த ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அப்பொழுது தான் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்' என்று, தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்குமேயானால், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்திற்கோ வழங்க வேண்டும் என, வலியுறுத்தினேன்.

தற்போதுள்ள பல் இல்லாத ஆணையத்தை அதிகாரமுள்ள ஆணையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இந்த பொருள். கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார்.காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா? முல்லைப் பெரியாறு விஷயத்திலேயே கருணாநிதியின் முகமூடி கலைந்து விட்டதே. இவர் எங்கிருந்து காவிரி பிரச்னையில் குரல் கொடுக்கப் போகிறார்?கடந்த 31ம் தேதி, தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாக் கூட்டத்தில், "தண்ணீர் விடமாட்டேன் என்று சொன்ன கர்நாடகம் கூட, விட்டுத்தான் தீர வேண்டும் என்ற அளவுக்கு மழை பொழிந்துள்ளது' என்று, மகிழ்ச்சி பொங்க கருணாநிதி பேசி இருக்கிறார்.

அவரது இது போன்ற பேச்சு ஏதோ தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் வந்த மிகப் பெரிய ஆபத்து நீங்கியுள்ளது போல் அமைந்துள்ளது.கருணாநிதி கர்நாடகத்திற்கு முதல்வரா அல்லது தமிழகத்திற்கு முதல்வரா? கர்நாடக முதல்வர் இவ்வாறு பேசியிருந்தால் இதில் அர்த்தம் இருக்கிறது. தமிழக முதல்வர் இவ்வாறு பேசுவதைப் பார்த்தால் எதற்கோ அஞ்சுகிறார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.கடைசியாக தனது அறிக்கையில், "அண்டை மாநிலங்களுடன் சுமுக உறவை வளர்த்துக் கொண்டு, நமக்குத் தேவையான தண்ணீரைப் பெற வேண்டிய அணுகுமுறையை அரசு கடைபிடித்து வருகிறது' என, கூறியிருக்கிறார் கருணாநிதி. அவரது நடவடிக்கை மூலம், தமிழகம் வளம் பெறவில்லை. இனிமேல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு  புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.

Wednesday, October 27, 2010

வடசென்னை மாவட்ட செயலர் மாற்றம்

சென்னை:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலர் பதவியிலிருந்துP.K. சேகர்பாபு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்D. ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா  வெளியிட்டுள்ள அறிவிப்பு:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலர் பதவியில் இருந்து P.K.சேகர்பாபு விடுவிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநிலச் செயலர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவிகளிலிருந்துD. ஜெயகுமார் விடுவிக்கப்படுகிறார். வடசென்னை மாவட்ட புதிய செயலராகD. ஜெயகுமார் நியமிக்கப்படுகிறார்.திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளராக இலக்கிய அணி மாநில செயலர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலர் பொறுப்பிற்குP.K. சேகர்பாபு எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மாஉத்தரவிட்டுள்ளார்.



கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், வடசென்னை மாவட்டத்தில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன.   வடசென்னையை அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாவட்டத்தில் அடங்கிய எட்டு சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு புரட்சிதலைவி அம்மா நேற்று முன்தினம் அவசர அழைப்பு விடுத்தார். அவைத்தலைவர் மதுசூதனன், பேரவை மாநில செயலர் நயினார் நாகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலர் ஜெயகுமார்,மாவட்டபேரவை தலைவர் கு.சீனிவாசன்,வெற்றிவேல், நீலகண்டன் உள்ளிட்ட சிலரை மட்டும்புரட்சிதலைவி அம்மா அழைத்து பேசினார்.வடசென்னையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே, சட்டசபை தொகுதிகளை பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை அனைத்து தொகுதிகளிலும் செய்ய வேண்டும் என புரட்சிதலைவி அம்மா உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி, ஆர்.கே.நகர்P.K. சேகர்பாபு, ராயபுரம் D.ஜெயகுமார், திரு.வி.க., நகர்வ. நீலகண்டன், துறைமுகம் கு.சீனிவாசன், பெரம்பூர், வில்லிவாக்கம் P.வெற்றிவேல், மீதமுள்ள எழும்பூர், கொளத்தூர் தொகுதிகளை பக்கத்து தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.